/* */

திண்டுக்கல்: அகரம் முத்தாலம்மன் திருவிழா விமரிசையாக நடைபெற்றது

Agaram Muthalamman Temple-கோவில் கொலு மண்டபத்தில் அமர்ந்திருந்த முத்தாலம்மன் சொருக்கு பட்டையத்தில் பவனி மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திண்டுக்கல்: அகரம் முத்தாலம்மன் திருவிழா விமரிசையாக நடைபெற்றது
X

Agaram Muthalamman Temple-திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அகரம் முத்தாலம்மன் திருவிழா முக்கிய நிகழ்வான குழு மண்டபத்திலிருந்து அம்மன் ஊர்வலமாக பூஞ்சோலையை சென்றடைந்தல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற அகர முத்தாலம்மன் கோவில் திருவிழா பதினெட்டாம் தேதி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (19 .10. 2021) அகரம் முத்தாலம்மன் அதிகாலை ஆறு மணி அளவில் கோவில் நிர்வாக முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 18 பட்டி கிராம மக்களும் அதிக அளவில் கோவிலுக்கு வருவது வழக்கம். தமிழக அரசினுடைய கொரோனா தொற்றுநோய் விழிபுணர்வுக்கு சட்ட திட்டங்களை ஏற்று கோயில் நிர்வாகத்தினர் திருவிழாவை நடத்தினர்.கோவில் கொலு மண்டபத்தில் அமர்ந்திருந்த முத்தாலம்மன் சொருக்கு பட்டையத்தில் பவனி மேற்கொண்டார். அம்மன் வரும் வழியில் ஆற்றில் தண்ணீர் செல்வதால் அம்மன் ஆற்றுக்குள் இறங்கி பக்தர்களுக்கு சிறப்பான காட்சியளித்தார்.ஆற்றைக்கடந்து அம்மன் திருக்கோவிலில் சாலை வழியாக சாலையோரம் கூடியிருந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி பூஞ்சோலை சென்றடைந்தார். இவ்விழாவில் கோயில் நிர்வாகிகள் பதினெட்டுபட்டி முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 March 2024 11:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!