/* */

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

உறவினரின் இறுதி சடங்கிற்காக பெற்றோருடன் சென்றபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

HIGHLIGHTS

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
X
ரஞ்சித்குமார். 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது14). இவன் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் தனது உறவினர் இறந்த இறுதி சடங்கு நிகழ்ச்சிக்காக பெற்றோருடன் மாணவன் நேற்று ஒகேனக்கல்லுக்கு சென்றான்.

ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் அவர்கள் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது மாணவன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ராஜா மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று காவிரி ஆற்றில் மூழ்கிய ரஞ்சித்குமாரை மீட்டனர். உயிருக்கு போராடிய நிலையில் மாணவனை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினரின் இறுதி சடங்கிற்காக பெற்றோருடன் சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 24 Jan 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!