Begin typing your search above and press return to search.
காரிமங்கலம் அருகே அனாதையாகக்கிடந்த வாலிபர் சடலம்; போலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகே மர்மமான முறையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மணி கட்டியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடந்தது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த வாலிபரின் உடலில் காயங்கள் இருந்தன. அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்; அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவ்வழியாக சென்ற வாகனம் மோதியதில் இறந்தாரா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.