தொப்பூர் கணவாயில் லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்து: 2 டிரைவர்கள் படுகாயம்
தொப்பூர் கணவாயில் முன்னால் சென்ற லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் படுகாயமடைந்தனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜிட்டாண்டஹள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் சீனிவாசன் (வயது 23). இவர் நேற்று நள்ளிரவில் ஓசூரிலிருந்து விருதுநகருக்கு இயந்திர பொருட்கள் ஏற்றிக்கொண்டு தர்மபுரி அடுத்த தொப்பூர் கணவாயில்சென்று கொண்டிருந்தார்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 29) டேங்கர்லாரியில் ஸ்பிரிட் ஏற்றிக்கொண்டு கர்நாடகாவில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் தொப்பூர் கணவாயில் சென்றபோது முன்னால் சென்ற ஈச்சர்லாரி மீது மோதியது.இதில் இரண்டு லாரிகளும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
டிரைவர்கள் சீனிவாசன் ,மகேந்திரன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்த்தில் போலீசார் போக்குவரத்தை சரி செய்து ஒரு வழிப்பாதையில் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.