/* */

தர்மபரியில் உயர் மின் கோபுர விளக்குகள் கொள்முதல் செய்ய ஊராட்சிகளுக்கு தடை

தர்மபுரி மாவட்டத்தில் உயர் மின் கோபுர விளக்குகள் கொள்முதல் செய்ய ஊராட்சிகளுக்கு தடை கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவு.

HIGHLIGHTS

தர்மபரியில் உயர் மின் கோபுர விளக்குகள் கொள்முதல் செய்ய ஊராட்சிகளுக்கு தடை
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி.

தர்மபுரி மாவட்டத்தில் உயர் மின் கோபுர விளக்குகள் கொள்முதல் செய்ய ஊராட்சிகளுக்கு தடை கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவு.

தமிழக அரசு வழிகாட்டுதல்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் ஊரக பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட/நிறுவப்பட்ட தெருவிளக்குகளை கிராம ஊராட்சிகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தெரு மின்விளக்குகளை ஏற்படுத்தி பராமரித்தலிலும், கொள்முதல் செய்வதிலும், தேர்வு செய்வதிலும் மறு உத்தரவு வரும் வரையில் மூன்றடுக்கு ஊராட்சிகள் உரிய நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி உத்தரவு.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளதாவது:- தமிழக அரசு வழிகாட்டுதல்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் ஊரக பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட/நிறுவப்பட்ட தெருவிளக்குகளை கிராம ஊராட்சிகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தெரு மின்விளக்குகளை ஏற்படுத்தி பராமரித்தலிலும், தெரு மின்விளக்குகள் கொள்முதல் செய்வதிலும், பராமரிப்பதிலும், தெருவிளக்கு வகைகளை தேர்வு செய்வதிலும் பெருத்த அளவில் மாறுபாடுகள் காணப்படுபதால், மறு உத்தரவு வரும் வரையில் மூன்றடுக்கு ஊராட்சிகள் பின்வரும் நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1. மூன்றடுக்கு ஊராட்சிகள் எந்தவொரு நிதியிலிருந்தும் உயர்கோபுர மின்விளக்குகள், சிறுமின் கோபுர விளக்குகள், ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பங்களுடன் கூடிய தெருவிளக்குகள் அமைத்திட தடை செய்யப்படுகிறது.

2. சோலார் உயர்மின்கோபுர விளக்குகள் அமைப்பது முழுவதும் மறு உத்தரவு வரும்வரை தடை செய்யப்படுகிறது.

3. சோலார் எல்.இ.டி விளக்குகள், கம்பங்களுடன் கொள்முதல் செய்தல் உடனடியாக தடை செய்யப்படுகிறது.

இதனடிப்படையில் மேற்காணும் அறிவுரைகளை மீறி கொள்முதல் செய்யும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், மீறி கொள்முதல் செய்யப்படும் / நிறுவப்படும் சோலார் எல்.இ.டி விளக்குகள், உயர்கோபுர மின்விளக்குகள், சிறுமின்கோபுர விளக்குகள், சோலார் எல்.இ.டி. விளக்குகள் ஆகியவற்றிற்கு செலவிடப்படும் தொகையை தொடர்புடைய அலுவலர்களிடம் இருந்து பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேற்குறிப்பிடப்பட்ட அறிவுரைகளை அனைத்து ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தெரிவித்துள்ளார்

Updated On: 11 Jan 2022 6:00 AM GMT

Related News