தர்மபுரியில் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தர்மபுரியில் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் ச.திவ்யதர்சினி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் வலிமையான இந்தியா 75-வது சுதந்திர தின ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, கொடியசைத்து இன்று (21.08.2021) தொடங்கி வைத்தார்.
வலிமையான இந்தியா 75-வது சுதந்திர தின ஓட்டத்தில் நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், தேசிய மாணவர் படையினர் என 150க்கும் மேற்பட்டவர்கள் வலிமையான இந்தியா 75-வது சுதந்திர தின ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஓட்டமானது அதியமான் கோட்டத்தில் தொடங்கி, எர்ரபட்டி, ஒட்டபட்டி, அரசு கலைக்கல்லூரி வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,"இந்தியா சுதந்திரம் பெற்று 75-ஆண்டுகள் விழாவில் வலிமையான மற்றும் ஆரோக்கியமான சுதந்திர இந்தியா ஓட்டம் 2.0 நிகழ்ச்சியில் பங்கேற்க நான் உறுதிமொழி எடுக்கிறேன். நான், என்னை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகமும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நான் அவர்களை ஊக்குவிப்பேன். வலுவான மற்றும் திறமையான நாடு மற்றும் ஒரு சுறுசுறுப்பான தன்னம்பிக்கையுள்ள சமூகத்தை உருவாக்க என் வாழ்க்கையில் தினமும் முப்பது நிமிட உடற்பயிற்சி செய்வேன் என உறுதியளிக்கிறேன்." என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிறைவாக சுதந்திர இந்தியா ஓட்டம் 2.0 நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா ஜேன் சுசிலா, பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய தேசிய நலப்பணிகள் அலுவலர் முனைவர் சி.கோவிந்தராஜ், அரசு கலைக்கல்லூரி விளையாட்டுத்துறை இயக்குனர் முனைவர் கே.பாலமுருகன், தருமபுரி இந்திய வானொலி ஒலிபரப்பு தலைமை அலுவலர் ஆர்.முரளி, தருமபுரி நேரு யுவ கேந்திரா உறுப்பினர் கே.விஜயன், தருமபுரி நேரு யுவ கேந்திரா கண்காணிப்பாளர் ஜி.வேல்முருகன் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.