Begin typing your search above and press return to search.
தொப்பூர் கணவாய் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி
தொப்பூர் கணவாயில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
HIGHLIGHTS
சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 40. லாரி டிரைவர். இவர் குஜராத்தில் இருந்து கோவைக்கு செல்வதற்காக பிளாஸ்டிக் லோடு ஏற்றிக் கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார்.
தர்மபுரி -சேலம் பைபாஸ் சாலையில் வரும்பொழுது, தொப்பூர் கணவாயில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் ராஜ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.