தர்மபுரி: பள்ளி மாணவியர் விடுதிக்கு துப்புரவு பொருட்கள் வழங்கல்
தர்மபுரியில் உள்ள, நகராட்சி மாதிரி பள்ளி மாணவியர் விடுதிக்கு துப்புரவு பொருட்கள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
தர்மபுரி நகராட்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், நகராட்சி மாதிரிப்பள்ளி மற்றும் விடுதி அமைந்துள்ளது. இந்த பள்ளி ஆசிரியைகள் மற்றும் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு, கிரீன் மதர்லேண்டு புரடக்சன் மற்றும் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் துப்புரவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை கல்விக்கரசி தலைமை தாங்கினார். டிரஸ்ட் செயலாளர் ஜமுனா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் டிரஸ்டின் இயக்குனர் எஸ்.தீபா சம்பத் கலந்து கொண்டு, ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தேவையான முகக் கவசங்கள், கிருமிநாசினி மற்றும் விடுதிக்கு தேவையான துப்புரவு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் லட்சுமி, மணிமேகலை, சாந்தி, வித்யா, சாலம்மாள், சித்ரா, புவனேஸ்வரி, கோவிந்தம்மாள், மகேஸ்வரி, விஜியா, பழனியம்மாள் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.