தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
HIGHLIGHTS
தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், கிழக்கு மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது.
நகர பொருப்பாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வருகிற 15 ந் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, அதை முன்னிட்டு அனைத்து ஒன்றியங்களிலும் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன், வருகிற 20 ந் தேதி, மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள கண்டன ஆர்பாட்டத்தில் ஒவ்வொரு தொண்டர்களும் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
இக்கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாமரைசெல்வன், எம்.ஜி.சேகர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தங்கமணி, நாட்டன் மாது மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.