/* */

ஒரே கிராமத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தருமபுரி அருகே ஒரே கிராமத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஒரே கிராமத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

தருமபுரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, அங்குள்ள ராயல் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அதேப்பகுதியை சேர்ந்த சிலருக்கு சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உடனடியாக அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அந்தப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், திருவேங்கடம் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 21 April 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!