/* */

தங்கர் பச்சானும் அன்புமணி மச்சானும் மோதும் கடலூர் தொகுதி! வெல்லப்போவது யார்?

கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத், சௌம்யா அன்புமணியின் சகோதரர்

HIGHLIGHTS

தங்கர் பச்சானும் அன்புமணி மச்சானும் மோதும் கடலூர் தொகுதி! வெல்லப்போவது யார்?
X

கடலூர் தொகுதி வேட்பாளர்கள் 

2009ஆம் ஆண்டு கடலூர் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ரூட்டி, கடலூர், குறிச்சிப்பாடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் உளுந்தூர் பேட்டை, நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது.

1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் என்.டி.கோவிந்தசாமி கச்சிராயர் வெற்றி பெற்றார்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்சமாக காங்கிரஸ் 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டிவிஆர்.ரமேஷ் குமார் 522,160 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கோவிந்தசாமி 3,78,177 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட தங்கவேல் 44,892 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சித்ரா 34,692 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வி.அண்ணாமலை 23,713 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிகவின் சிவகொழுந்து போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார்.

கடலூர் தொகுதியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் வென்ற திமுக எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவரது அதிரடி அரசியல் குறைந்துவிட்டது. தற்போது நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார்.

இவர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் ஆவார். தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் சகோதரரும் கூட. , வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும், திமுக கூட்டணியில் உள்ளார் என்பதும் இவரது பலமாக உள்ளது.

பாமக சார்பில் போட்டியிடும் இயக்குநர் தங்கர் பச்சான் கடலூரை தாண்டி தமிழகம் முழுவதும் பிரபலம், நெய்வேலி என்.எல்.சி விவகாரம், முந்திரி மற்றும் பலா விவசாயிகள் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருவது மக்களிடையே பெரும் மதிப்பை பெற்று தந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சிவகொழுந்துவுக்கு தேமுக ஓட்டுக்களும், அதிமுகவின் கட்டமைப்பும் வலுசேர்ப்பதாக அமைகிறது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகனுக்கு முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியில் ஜெயிக்கப்போவது யார்? தங்கர் பச்சானா? அன்புமணியின் மச்சானா? என்பது தான் தற்போதைய களநிலவரம்

Updated On: 7 April 2024 2:47 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  6. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  7. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  8. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  9. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  10. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு