/* */

நெய்வேலியில் கொரோனா பரவல் காரணமாக கடைகள் இயங்க கட்டுப்பாடு

நெய்வேலியில் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி என நெய்வேலி நகர வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது

HIGHLIGHTS

நெய்வேலியில் கொரோனா பரவல் காரணமாக கடைகள் இயங்க கட்டுப்பாடு
X

கடலூர் மாவட்டத்தில் கொரோனா மீண்டும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக நெய்வேலி,குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பகுதிகளில் கொரோனா‌ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நகர நிர்வாக அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு. ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று முதல் 10-08-2021வரை (பால் மற்றும் மருந்து கடைகள் தவிர) அனைத்து கடைகளும் மாலை 5.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படுகின்றது என நெய்வேலி நகர வர்த்தக சங்க கூட்டமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர கட்டுப்பாட்டை அனைத்து வணிகர்களும் கடைபிடிக்கவும் சங்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நெய்வேலி நகரில் வணிகம் செய்யும் கடை உரிமையாளர் மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக 10-08-2021ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் நெய்வேலி நகர வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Aug 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  3. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  4. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  5. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  6. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  7. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  8. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  9. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  10. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...