/* */

கடலூர் மாவட்டத்தில் டிச.20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கடலூர் மாவட்டத்திற்கு டிச -20 உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் டிச.20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
X

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்.

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 19 ஆம் தேதியும் ஆருத்ரா தரிசனம் வருகின்ற 20ஆம் தேதி நடைபெற உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக ஆருத்ரா தரிசன விழாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில் சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி திங்கட்கிழமை கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி மாதம் 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கருதப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Updated On: 17 Dec 2021 2:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....