/* */

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டு

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்த கடலூர் மாவட்ட கல்வி அலுவலர்

HIGHLIGHTS

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டு
X

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்த கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் 

தமிழ் நாடு அரசின் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறை , நெறிபடுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் மைய பணிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தன்னார்வலர்களாக பங்கேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ப.சுந்தரமூர்த்தி அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இப்பேரிடர் கால பணியில் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா, ஆ.புதுப்பாளையம் தூய மரியன்னை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஜீவா ஜாக்குலின், வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தெரேசா கேத்ரின், குறிஞ்சிப்பாடி ஆண்டார்முள்ளிப்பள்ளம் தலைமை ஆசிரியர் செல்வி, வாண்டியாம்பள்ளம் தலைமை ஆசிரியர் அமுதா, ஆத்திரிகுப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் சீனுவாசன், எல்லப்பன்பேட்டை ஆசிரியர் இராயப்பன், மற்றும் ஆசிரியர்கள் சுந்தர், கனியா சாந்தகுமார், மதன்லால் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

பேரிடர் கால பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கல்வி துணை ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் சந்தித்து பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் பணியை சிறப்பாக தொடர அறிவுரை வாழ்த்தினார் .

Updated On: 7 Jun 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...