Begin typing your search above and press return to search.
முன்னெச்சரிக்கை தடுப்புப்பணிகள்: பண்ருட்டி எம்எல்ஏ ஆய்வு
பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு அலுவலர்களுடன் கேட்டறிந்தார் பண்ருட்டி எம்எல்ஏ. வேல்முருகன்.
HIGHLIGHTS
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 30வார்டுகளிலும் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை தடுப்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் தினசரி நடைபெறும் பணிகள் குறித்து ஆணையர் பார்த்தசாரதி மற்றும் துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனிடம் விளக்கினர்.