/* */

சிசிடிவி கேமராக்களால் குறைந்து வரும் குற்ற சம்பவங்கள்: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவை மாநகரில் குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

சிசிடிவி கேமராக்களால் குறைந்து வரும் குற்ற சம்பவங்கள்: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
X

காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்

கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு புதியதாக அமைக்கப்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4மாதங்களில் 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது எனவும், அனைத்து கேமராக்களும் சாலைகளை நோக்கி நிறுவப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே இருக்கக்கூடிய கேமராக்களை ஜியோ டேக்கிங் செய்து, அதற்குப் பின்னர் கூகுள் அனாலிசிஸ் செய்து எந்தெந்த பகுதிகளில் கேமராக்கள் தேவைப்படுகிறது என்று தெரிந்து கொண்டு அந்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகி காவல்துறைகளுடன் இணைந்து கேமராக்களை நிறுவி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாகவே இந்த கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளது எனவும், குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்யும்போது கேமரா இல்லாத பகுதிகளில் பார்த்து குற்றங்களை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர் எனக்கூறிய அவர், அதன் அடிப்படையில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் கொலை,கொள்ளை குற்றங்கள் குறைந்துள்ளது எனவும், விபத்துக்களை குறைப்பதற்கும் கேமராக்கள் பயன்படுகிறது என தெரிவித்தார். பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தனியாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது எனவும், குறிப்பிட்ட எண்ணிக்கையை மீறி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Updated On: 7 March 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  3. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  5. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  6. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  7. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்