/* */

மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Coimbatore News- மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை வருகிற 22ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
X

Coimbatore News- மாசாணியம்மன் கோவில் கொடியேற்றம்

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசிதி பெற்ற இந்த கோவிலுக்கு வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகளவிலான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வருவது வழக்கம்.

குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின் வருகை அளவுக்கு அதிகமாக இருக்கும். உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகள், கோவை, திருப்பூர், உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை ஈரோடு, கரூர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதுபோன்ற விஷேச நாட்களில் பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சர்க்கார்பதியில் இருந்து பிரத்யோகமாக சேகரிக்கப்பட்ட 85 அடி உயரமான மூங்கில் சேத்துமடைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள காளியம்மன் கோவிலில் பூஜை செய்யப்பட்டது.

அதன் பிறகு அங்கிருந்து மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை வருகிற 22ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் 25ம் தேதி காலை 9 மணிக்கு மேல் துவங்கும். இதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 9 Feb 2024 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’