/* */

சேற்றில் வழுக்கி விழுந்த காட்டு யானை உயிரிழப்பு

சிஆர்பிஎப் முகாமிற்குள், கடந்த 6 ம் தேதியன்று ஆண் காட்டு யானை ஒன்று சேற்றில் வழுக்கி விழுந்தது.

HIGHLIGHTS

சேற்றில் வழுக்கி விழுந்த காட்டு யானை உயிரிழப்பு
X

உயிரிழந்த காட்டு யானை.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சிஆர்பிஎப் முகாமிற்குள், கடந்த 6 ம் தேதியன்று ஆண் காட்டு யானை ஒன்று சேற்றில் வழுக்கி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் உடல் நலம் தேறிய நிலையில், வனப்பகுதிக்குள் அந்த யானை சென்றது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் வனப்பகுதிக்கு இருந்து சுமார் 250 மீ. தொலைவில் பட்டா நிலத்திற்கு வந்து, யானை மீண்டும் உடல் நலக்குறைவால் படுத்து விட்டது.

இதையடுத்து முதுமலை வனக் கால்நடை மருத்துவர் ராஷேஸ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர் வெற்றிவேல் ஆகியோர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து யானையை பிரேத பரிசோதனை செய்த வனத்துறையினர், யானையின் உடலை தகனம் செய்தனர்.

Updated On: 9 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா