/* */

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் - கலெக்டர், ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் - கலெக்டர், ஆணையாளர் ஆய்வு
X

கோவை சுந்தராபுரம் சந்தையில்,  ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவல் குறைந்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர், இன்று ஆய்வு செய்தனர். அவ்வகையில், சுந்தராபுரம் பகுதியில் உள்ள தக்காளிச்சந்தை மற்றும் உழவர்சந்தை ஆகிய இடங்களில் இருவரும் கள ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

Updated On: 30 Jun 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை