/* */

சட்ட விரோத மது கூடங்களை மூட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சட்ட விரோத மது கூடங்களை மூட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்.

கோவை வடக்கு, தெற்கு, திருப்பூர் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக டாஸ்மாக் கோவை வடக்கு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது. இதில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அதிரடி ஆய்வு என்ற பெயரில் டாஸ்மாக் பணியாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் அத்துமீறிய செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். சட்டவிரோத மதுக்கூடங்களை உடனடியாக மூட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 4 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா