/* */

'12 வருஷம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தேன், கொரோனாவுக்கு கொடுத்திட்டேன்' : பள்ளி மாணவி நெகிழ்ச்சி

கோவையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி சுமரேகா உயர்கல்விக்காக உண்டியலில் 12 ஆண்டுகளாக சேமித்து வந்த 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

HIGHLIGHTS

12 வருஷம் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தேன், கொரோனாவுக்கு கொடுத்திட்டேன் : பள்ளி மாணவி நெகிழ்ச்சி
X

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.இதன் பேரில் திரைப்பட நடிகர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களான நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலமுரளி. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேணுகா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களது 17 வயது மகள் சுமரேகா காங்கேயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் சேமிப்பு பழக்கம் கொண்ட சுமரேகா, ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பெற்றோர்கள் அவ்வப்போது கொடுத்த பணத்தை உண்டியலில் சேமித்து வந்துள்ளார். ஐஏஎஸ் படிக்க வேண்டுமென்பதற்காக அப்பணத்தை சேமித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததை தொலைக்காட்சி செய்திகளில் சுமரேகா பார்த்துள்ளார்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பை அளிக்க வேண்டுமென்ற முனைப்பில், உண்டியலில் சேமித்த பணத்தை கொடுக்க முன் வந்தார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து சுமரேகா 41 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை வழங்கினார்.

Updated On: 15 May 2021 2:28 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா