/* */

கொரோனா கண்காணிப்பு பணிகள்: ஆட்சியர், அமைச்சர் ஆய்வு

ரயில் மூலம் கோவை வரும் பயணிகளிடம் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனா கண்காணிப்பு பணிகள்: ஆட்சியர், அமைச்சர் ஆய்வு
X

கோவை ரயில் நிலையத்தில் ஆட்சியர் சமீரன், அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர்த்த மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநில எல்லைகள் மற்றும் ரயில் நிலையத்தில் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கோவை வரும் பயணிகளிடம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடமும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்படுகிறது. இல்லையெனில் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Updated On: 5 Aug 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  4. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  5. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  6. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  7. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  9. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  10. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!