/* */

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கோவை ரயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க ரயில்வே ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர கோரிக்கை
X

செய்தியாளர்களிடம் பேசும் கண்ணையா

மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்திற்கு பல்வேறு மத்திய அரசு துறை ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, அதனை ரத்து செய்ய வேண்டியும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 8ம் தேதியிலிருந்து காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரைக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கண்ணையா கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையா கூறுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. முதல்கட்டமாக நான்கு நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறோம். காலை 9 முதல் மாலை 5 மணி வரைக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம்.

இரயில்வே துறை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அதை சார்ந்த மக்களும் பாதிப்பு அடைந்துள்ளனர். மக்களுடன் பிரச்சினைக்கு சேர்த்து போராட்டம் நடத்தி வருகின்றோம். அடித்தட்டு, நடுத்தர மக்கள் பாதிப்படையமால் இருக்கும் வண்ணம் கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.

வந்தே பாரத் திட்டம் போன்றவையால் எளிய மக்கள் பதிப்படைய வாய்ப்புள்ளது. எல்லா பெட்டிகளும் ரயில்களை ஏ.சி.களாக மாற்றும் போது கட்டணம் உயர்வால் மக்கள் பாதிப்படைவார்கள்.

மத்திய அரசு ஒவ்வொரு துறையாக தனியாருக்கு கொடுத்து வருகையில் இப்போது இரயில்வே துறைக்கு வந்துவிட்டார்கள் என்றார். தனியாரிடம் இரயில்வே சென்றால் ஆம்னி பஸ் போன்று இரயில்வேயில் பயணம் கட்டணம் ஏறும் என்றார். மேலும் 100 இரயில்கள் தனியாருக்கு கொடுத்துள்ளார்கள். போராட்டம் 3 வது நாளக தொடரும் நிலையில் அரசு சார்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை என்றார்.

Updated On: 10 Jan 2024 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை