/* */

அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை

நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
X

புகாரளிக்க வந்த அதிமுகவினர்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலையின் வேட்பு மனுவை முறைப்படி தாக்கல் செய்யவில்லை என்பதால், அதனை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயச்ட்சை வேட்பாளர்கள் வலியுறுத்தினர்.

அந்த எதிர்ப்பையும் மீறி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் அண்ணாமலை நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக புது சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்திகுமார் பாடியிடம் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர். அப்போது விதிமுறைகளை மீறி வேட்பு மனுத்தாக்கல் செய்த அண்ணாமலையின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.

இது குறித்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் கூறுகையில், அண்ணாமலை வேட்புமனு மீது நிறைய பிரச்சனைகள் உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். அண்ணாமலையின் பிரமாண பத்திரம் நீதிமன்றங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் முத்திரை தாளில் கொடுத்துள்ளார். இது முற்றிலும் தவறு.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இதையெல்லாம் கவனிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளது தவறு. சுயேச்சை வேட்பாளர்களுக்கு கமா இல்லை, புள்ளி இல்லை என வேட்பு மனுகள் நிராகரிக்கப்பட்டது. வேட்புமனு பரிசீலணையின் போது நாங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்கவில்லை. ஒருதலைப் பட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் கூட , அந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கூடும். அண்ணாமலைக்கு போடக்கூடிய வாக்குகள் வீண் தான். தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றப்பட வேண்டும். நடுநிலையாக செயல்படக்கூடிய அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். இந்திய தேர்தல் வரலாற்றில் இதுபோன்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. படிக்காதவர்கள் கூட இது போன்ற தவறுகளை செய்ததில்லை. அண்ணாமலை வேட்புமனு நிராகரிக்க பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் விஜயராகவன் கூறுகையில், நீதிமன்றங்களில் பயன்படுத்தும் முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது சட்டப்படி தவறு. அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒருவேளை அண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டாலும், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது. இது முழுக்க முழுக்க வேட்பாளரின் தவறு. அதனை தேர்தல் அதிகாரிகள் சரி பார்க்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் அந்த முத்திரைத்தாளை வழக்கு தாக்கல் செய்ய மட்டும் பயன்படுத்த வேண்டும். வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அண்னாமலையின் வேட்பு மனு குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நீதிமன்ற பயன்பாட்டிற்கு அல்லாத முத்திரைத்தாளில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக வேட்பு மனு நகலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Updated On: 28 March 2024 2:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  4. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  5. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  7. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  10. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்