Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னையில் பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட மேயர்
Women Night Cycling பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி இன்று பெண்கள் இரவு நேரம் சைக்கிள் ஓட்டும் விழிப்புணர்வு பேரணியில் மேயர் பங்கேற்றார்
HIGHLIGHTS
பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் இயல்பாக பொது இடங்களை உபயோகப்படுத்துவதற்காகவும், பெண்களின் பாதுகாப்பு எல்லோருடைய பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும், 'சிங்கார சென்னை 2.0' வீதி விழாவின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி இன்று பெண்களுக்கான இரவு நேர சைக்கிள் ஓட்டும் பேரணி நடைபெற்றது.
சென்னை இந்திரா நகர் பறக்கும் ரெயில் நிலைய நுழைவாயில் அருகில் நடைபெற்ற இந்த பேரணியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த சைக்கிள் பேரணியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கலந்து கொண்டு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்த நிகழச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.