/* */

சென்னையில் பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட மேயர்

Women Night Cycling பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி இன்று பெண்கள் இரவு நேரம் சைக்கிள் ஓட்டும் விழிப்புணர்வு பேரணியில் மேயர் பங்கேற்றார்

HIGHLIGHTS

சென்னையில் பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட மேயர்
X

பேரணியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் இயல்பாக பொது இடங்களை உபயோகப்படுத்துவதற்காகவும், பெண்களின் பாதுகாப்பு எல்லோருடைய பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும், 'சிங்கார சென்னை 2.0' வீதி விழாவின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி இன்று பெண்களுக்கான இரவு நேர சைக்கிள் ஓட்டும் பேரணி நடைபெற்றது.

சென்னை இந்திரா நகர் பறக்கும் ரெயில் நிலைய நுழைவாயில் அருகில் நடைபெற்ற இந்த பேரணியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த சைக்கிள் பேரணியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கலந்து கொண்டு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்த நிகழச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 May 2022 5:26 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!