/* */

சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது

இலங்கையில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த 3 பேரை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது
X
சென்னை விமான நிலையத்தில்  பசை வடிவில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கையிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த 3 ஆண் பயணிகள் ஒரு குழுவாக அந்த விமானத்தில் வந்தனா்.சுங்கத்துறையினருக்கு அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அவா்களை நிறுத்தி விசாரித்தனா்.அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.

இதையடுத்து அவா்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனா்.அவா்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 3 உருளைகளை கைப்பற்றினா்.அவைகளை திறந்து பாா்த்தபோது,தங்கப்பசைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

அந்த 3 உருளைகளிலும் 852 கிராம் தங்கப்பசையை கைப்பற்றினா்.அதன் மதிப்பு ரூ.37.88 லட்சம்.இதையடுத்து கடத்தல் பயணிகள் 3 பேரையும் சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 17 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்