/* */

கள்ளக்காதல் தகராறில் திமுக பிரமுகர் தலை துண்டித்து காெலை: பெண் உட்பட 3 பேர் கைது

திருவொற்றியூர் ராயபுரத்தில் திமுக பிரதிநிதி ஒருவரை கொலை செய்து வீட்டிற்குள் மூன்று நாட்களாக வைத்திருந்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

கள்ளக்காதல் தகராறில் திமுக பிரமுகர் தலை துண்டித்து காெலை: பெண் உட்பட 3 பேர் கைது
X

ராயபுரத்தில் காெலையான திமுக பிரமுகர் சக்கரபாணி. கைது செய்யப்பட்ட தமிம்பானு மற்றும் அவரது தம்பி வாசிங் பாஷா.

திருவொற்றியூர் ராயபுரத்தில் திமுக பிரதிநிதி ஒருவரை கொலைசெய்து வீட்டிற்குள் மூன்று நாட்களாக வைத்திருந்ததால் பரபரப்பு. தலை துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்த நிலையில் வெட்டப்பட்ட தலையை தேடிவரும் போலீசார்.

சென்னை மணலி பேசின் பாலம் சாலையை சேர்ந்தவர் சக்கரபாணி வயது 65 திமுகவின் ஏழாவது வட்ட பிரதிநிதியாக உள்ளார். இவர் அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணலி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு குடியிருந்த ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து இருந்ததாகவும் அதனை தொடர்ந்து வாங்குவதற்காக கடந்த 10ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பி வெளியில் சென்றதாகவும் ஆனால் திரும்பவும் வீட்டிற்கு வரவில்லை என்று குடும்பத்தினர் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் நான்கு நாட்களாக சக்கரபாணி காணவில்லை என்று போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில் செல்போன் சிக்னலை வைத்து ராயபுரத்தில் உள்ள க்ரேஸ் கார்டன் மூன்றாவது சந்து பகுதியில் கடைசியாக சிக்னல் இருந்ததாகத் தெரிவித்தன் அடிப்படையில், தமீம் பானு என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது தலையை துண்டாக வெட்டி உடலை மட்டும் கவரில் போட்டு மூடி வைத்து இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ராயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் தமீம் பானுவிற்கும் சக்கரபாணிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமீம் பானு வீட்டை காலி செய்து ராயபுரம் பகுதியில் வந்து குடியேறியதாகும், கடந்த 10ஆம் தேதி அன்று ராயபுரத்தில் உள்ள தமிம் பானுவின் வீட்டிற்கு சக்கரபாணி வந்து இருந்ததாகவும், அப்போது அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அதனை கண்ட தமிம் பானுவின் தம்பி வாஷிங் பாஷா அருகிலிருந்த அருவமனையைக் கொண்டு தலையை துண்டாக வெட்டியதுவும் தெரிய வந்துள்ளது. மேலும் வெட்டிய தலையை சாக்குமூட்டையில் வைத்து அடையாறு பகுதியில் உள்ள ஆற்றில் தூக்கி வீசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிம்பானு மற்றும் அவரது தம்பி வாசிங் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் கீழ் வீட்டில் குடியிருக்கும் ஆட்டோ டிரைவர் டில்லி பாபு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 14 May 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்