/* */

ஓட்டேரியில் திருமணமான ஐந்தாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

ஓட்டேரியில் திருமணமான ஐந்தாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

ஓட்டேரியில் திருமணமான ஐந்தாவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 3வது பிளாக் 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் அபிராமி, 27 , இவருக்கு கடந்த 23ஆம் தேதி, ஓட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த 24 ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொடுங்கையூரில் நடைபெற்றது.

இந்நிலையில், ஓட்டேரி வி.வி. கோவில் தெருவில் உள்ள அபிராமியின் அக்கா மோகனப்பிரியா என்பவர் வீட்டிற்கு, அபிராமி - சதீஷ் இருவரும் நேற்று விருந்துக்காக வந்துள்ளனர். மதியம் ஒரு மணியளவில் அபிராமி பெட்ரூம் கதவை தாழ்போட்டுக் கொண்டு, நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அபிராமி தூக்குப்போட்டுக் கொண்டது தெரியவந்தது. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலின் பேரில், ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்த அபிராமி இரவில் தூக்கம் வராமல் அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். எதற்கெடுத்தாலும் பயந்த அவர், தூங்கினால் கனவு வரும் என்ற பயத்தில் தூங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அபிராமி திருமணமான 5வது நாளிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 29 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  5. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  9. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  10. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...