/* */

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது

புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில்  கைது
X

பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா.

சென்னை: புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கேளம்பாக்கம் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஜூன் 16ஆம் தேதி டெல்லி அருகே சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதுவரை அவர் மீது மூன்று போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அவற்றுள் இரண்டு போக்சோ வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு போக்சோ வழக்கின் கீழ் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி கொடுத்த தகவலின் பேரில் மூன்றாவது வழக்கையும் போக்சோவாக மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தில் கைதான சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 July 2021 8:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்