Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னையில் டாஸ்மாக் பாரில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு 'காப்பு'
சென்னை சைதாப்பேட்டையில், டாஸ்மாக் பாரில் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS
சென்னை, மடுவின்கரையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு, மது அருந்த திருநாவுக்கரசர் என்பவர் வந்துள்ளார். மது அருந்திவிட்டு அவர் கொடுத்த, ஐந்து, 500 ரூபாய் நோட்டுக்களை ஊழியர்கள் பரிசோதித்ததில் அவை கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக கிண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
டாஸ்மாக் பாருக்கு விரைந்த போலீசார், கள்ள நோட்டுக்களை கொடுத்த நபரை காவல் நிலையம் அழைத்து. வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர் வேளச்சேரியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பதும், இவருக்கு ஆலந்துாரை சேர்ந்த மெகபூப் என்பவர் மூலமாக பணம் கிடைத்ததும் தெரியவந்தது. அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4000 மதிப்பிலான எட்டு, 500 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.