/* */

ஐதராபாத்திலிருந்து 82 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மருந்து சென்னை வந்தது!

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் மேலும் 82 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மருந்து சென்னைக்கு வந்திறங்கியது.

HIGHLIGHTS

ஐதராபாத்திலிருந்து  82 ஆயிரம் டோஸ் கோவாக்சின் மருந்து சென்னை வந்தது!
X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் ஒரளவு கட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமளவு குறைந்து வருகிறது. ஆனாலும் தமிழக அரசு மாநிலம் முழுவதிலும் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடுவதில் மாநில அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதோடு அரசுடன் இணைந்து தனியாா் மருத்துவமனைகள்,தனியாா் தொழிற்சாலைகள் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன. அதற்கு தடுப்பூசிகள் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான அளவு தடுப்பூசிகளை ஒதுக்கவில்லை. எனவே மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 16 பாா்சல்களில் 426 கிலோ தடுப்பூசி மருந்துகள் வந்தன. அதில் 82 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் வந்தன.தடுப்பூசி பாா்சல்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசிகள் சென்னையில் உள்ள 2 தனியாா் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ துறைக்கும் வந்துள்ளதாக கூறப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் தடுப்பூசி பாா்சல்களை குளிா்சாதன வாகனத்தில் ஏற்றி சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனா். அங்கிருந்து தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On: 26 May 2021 4:06 PM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  2. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  3. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  4. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  5. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  6. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  7. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  10. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்