/* */

வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு -புதிய ரேட் அறிவிப்பு

வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை மட்டும் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு  -புதிய ரேட் அறிவிப்பு
X

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை மட்டும் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தற்போது விலை உயர்த்தப்படவில்லை.

இதன்படி, 19 கிலோ வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை 43.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை 1874.5 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை 1736.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன் செப்டம்பர் 1ஆம் தேதி வர்த்தக கேஸ் சிலிண்டர்களின் விலை 75 ரூபாய் உயர்த்தப்பட்டது. அப்போது சென்னையில் ஒரு சிலிண்டர் 1831 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் விலை உயர்த்தப்பட்டு 1874.5 ரூபாயாக உள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களின் விலை தற்போது மாற்றப்படவில்லை. இதற்கு முன், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Oct 2021 11:54 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை