/* */

சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க வாய்ப்பு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க, வணிக வளாகம் மற்றும் அலுவலக வளாகங்கள் அமைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க வாய்ப்பு
X

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நிதி இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தொழில் தொடங்க, வணிக வளாகம் மற்றும் அலுவலக வளாகங்கள் அமைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நிதி இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடங்களில் தொழில் முனைவோர்கள், வணிக வளாகம் மற்றும் அலுவலக வளாகங்கள் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுடன் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நிதி இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமையில் மெட்ரோஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது, சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களிலும் அதனை சார்ந்த காலி இடங்களிலும் தொழில் தொடங்க உள்ளவர்கள், வணிக வளாகம் மற்றும் அலுவலக வளாகங்கள் அமைப்பதற்கும் தேவையான இட வசதி உள்ளதாகவும் அதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் உள்ளதாகவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நிதி இயக்குநர் டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா தெரிவித்தார்.

மேலும் மெட்ரோ இரயில் நிறுவனம் வணிக மேம்பாடு அடைய பல்வேறு யுக்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு சொந்தமான காலி இடங்களில் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அலுவலக கட்டிடம் அமைக்க தேவையான இட வசதி உள்ளது. இதற்கான இட வசதி நேரு பூங்கா, சைதாப்பேட்டை, அரும்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, மத்திய சதுக்கம், மண்ணடி, விம்கோ நகர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு சொந்தமான இடங்களில் 3000 சதுர மீட்டர் முதல் 10,000 சதுர மீட்டர் வரை உள்ளது. இதுபோன்ற இடங்களில் அடுக்குமாடி வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள் அமைக்கலாம்.

மெட்ரோ இரயில் நிலைய பொதுத்தளங்களில் சிறு குறு மற்றும் நடுத்தர கடைகள் நடுத்துவதற்கான இட வசதிகள் உள்ளன.

இதுபோன்ற இட வசதி பெற விருப்பம் உள்ளவர்கள் மேலும் தகவல்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தொடர்பு கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் விவரங்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் https://chennaimetrorail.org/wp-content/uploads/2023/05/List-of-Empanelled-Consultants.pdf இணையத்தள

முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு துறை முதன்மை பொது மேலாளர் ஆர். எம். கிருஷ்ணன், இணை பொது மேலாளர் ஆர். நரேந்திரகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Jun 2023 8:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....