/* */

நாளை முதல் அனைவரும் பயணிக்கலாம் தென்னக இரயில்வே அறிவிப்பு

நாளை முதல் அனைவரும் பயணிக்கலாம் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

நாளை முதல் அனைவரும் பயணிக்கலாம் தென்னக இரயில்வே அறிவிப்பு
X

பைல் படம்

சென்னையில் புறநகர் இரயில் சேவையை நாளை முதல் அனைவரும் பயன்படுத்தலாம் என தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த இரயில் பயணம், தற்போது அனைத்து பயணிகளுக்கும் அனுமதிக்கப் படுகிறது.

மேலும் பயணிகள் விரைவு இரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் வைத்திருந்தால், அவர்கள் மின்சார இரயில்களில் பயணம் செய்து கொள்ளலாம். பெண்கள் 24 மணிநேரமும் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைத்து நேரத்திலும் பயணம் செய்யலாம். ஆண் பயணிகளுக்கு கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே புறநகர் இரயில்களில் அனுமதி வழங்கப்படும்.

இரயில் நிலைய வளாகத்திற்குள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூபாய் 500 அபராதம் வசூல் செய்யப்படும் " இவ்வாறு தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On: 24 Jun 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!