/* */

மாதவரம் அருகே மேய்ந்து கொண்டிருந்த கறவை மாடுகள் திருடிய இளைஞர் கைது

மாதவரம் அருகே மேய்ந்து கொண்டிருந்த கறவை மாடுகள் திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மாதவரம் அருகே மேய்ந்து கொண்டிருந்த கறவை மாடுகள் திருடிய இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட சந்தோஷ்.

சென்னை கொடுங்கையூர் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவரது மூன்று கறவை மாடுகள் அதே பகுதியில் உள்ள புல் பண்ணையில் மேய விட்டுள்ளார். அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை திடீரென காணவில்லை. இதுகுறித்து கௌசல்யா கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் இரண்டு மாடுகள் காணாமல் போனதாக புகார் செய்தார்.

புகாரின்பேரில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மணலி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மதன் என்பவரின் மகன் சூர்யா (வயது 24 )கொடுங்கையூர் ஆண்டி மடம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்தோஷ் (வயது 19) ஆகிய இருவரும் 5 மாடுகளை திருடி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருட்டு மாடுகளை வாங்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 7 April 2022 3:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் அருகே காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம்