/* */

திருவள்ளூர் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

திருவள்ளூர் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூர் வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
X

திருவள்ளூர் மாவட்டம் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைகுழு கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட்ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி, பொருலாளர் வழக்கறிஞர் டில்லிபாபு ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை துவக்கி வைத்தனர்.

பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட்ரவி, உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் பெற்றோர்களுடன் இணைந்து பள்ளி மேலாண்மை குழு ஆற்ற வேண்டிய பணிகள், மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பள்ளியின் வளர்ச்சி, மாணவிகளின் அறிவு சார்ந்த வளர்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகளாக பெற்றோர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர். இதில் வேதியியல் ஆசிரியர் கிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.முடிவில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் பள்ளியின் வளச்சிக்கான உறுதிமொழி ஏற்றனர்.

Updated On: 10 July 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  2. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  4. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  7. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  8. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  10. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு