Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் ரூ.14.46 கோடி கொரோனா நிவாரண நிதி!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து அனைத்து பணியாளர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.14.46 கோடி வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் தேவைப்பட்டது. இதனால் தங்களால் முடிந்த பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதியில் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அதன்படி தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சிறுவர்களின் சேமிப்பு பணங்கள் என்று பல தரப்பட்ட மக்கள் கொரோனா நிவாரண நிதிக்கு பணம் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
இதன்படி, தங்களது ஒருநாள் சம்பள தொகையான ரூ.14.46 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.