/* */

உணவகங்களில் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உணவகங்களில் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
X

சென்னை: உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றிற்கு சேவை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுக்கும் சேவை வரி பொருந்துமா என்பது தொடர்பாக, சென்னை அஞ்சப்பர் செட்டிநாடு, தலப்பாகட்டி, ஆர்எஸ்எம், பிரசன்னம் மற்றும் சங்கீதா உணவு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

பின்னர் மனுக்களை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அனைத்து உணவகங்களிலும் உணவு மற்றும் பானங்கள் விற்பனைக்கு சேவை வரி முதலில் விதிக்கப்பட்டது. பின் குளிர்சாதன வசதி உள்ள ஓட்டல்களுக்கு மட்டும் என வரையறுக்கப்பட்டது. உணவுக்கான மூலப்பொருட்களை தயாரிப்பது அவற்றை வாங்குவது உணவை தயாரிப்பது இவற்றுக்கு எல்லாம் வரி விதிப்பு பொருந்தாது.

எனவே ஓட்டல்களில் இருந்து பார்சல்களில் உணவு மற்றும் பானங்கள் எடுத்து செல்வதற்கு சேவை வரி பொருந்தாது. சேவை வரித்துறை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 6 Jun 2021 4:22 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்