Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
தமிழகத்தில் இன்று முதல் நுாலகங்கள் திறக்க அனுமதி
தமிழகத்தில் உள்ள அனைத்து நுாலகங்களையும் இன்று முதல் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருந்தது. தொற்று குறையத் தொடங்கியதால், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனிஞ்ம், நூலகங்கள் திறக்கப்படாமல் இருந்தன. நூலகங்களை திறக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல், கட்டுப்பாடுகளுடன் நூலகங்களை திறக்க, பொதுநூலக இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நூலகம் திறக்க அனுமதி அளித்துள்ளதால், புத்தகப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.