Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
தற்கொலைக்கு முயன்ற ஆம்பூர் சிறுமியை மெரினாவில் போலீசார் மீட்டனர்
சென்னை மெரினா கடற்கறையில், தற்கொலை எண்ணத்தில் சுற்றி திரிந்த சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
HIGHLIGHTS
சென்னை மெரினா கடற்கறையில், தற்கொலை எண்ணத்தில் சுற்றி திரிந்த சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நொச்சிகுப்பம் அருகே உள்ள கடற்கரை மணற்பரப்பில், நேற்று முன்தினம் இரவு, 15 வயது சிறுமி சுற்றி திரிந்தார். இதை பார்த்த மெரினா போலீசார், உடனே சிறுமியிடம் விசாரித்தனர். இதில், ஆம்பூரைச் சேர்ந்தவர் என்பதும் பெற்றோர் கண்டித்ததால் கோவித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதற்காக பஸ்சில் மெரினாவிற்கு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சிறுமியை தங்க வைத்தனர். அவரது பெற்றோரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் விசாரித்த பின், சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.