/* */

திருப்போரூர்: சினிமா பாணியில் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்!

திருப்போரூரில் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்கள், மோப்ப நாய் கண்டுபிடிக்காதபடி சினிமா பாணியில் மிளகாய் பொடிகளை தூவிச்சென்ற சம்பவம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்போரூர்: சினிமா பாணியில் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்!
X

கொள்ளை நடைபெற்ற வீடு.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி ஊராட்சி, பஞ்சம்திருத்தி கிராமம், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் அதே பகுதியில் கட்டிட காண்ட்ராக்டராக உள்ளார். அருகிலுள்ள மானாமதி பகுதிக்கு துக்க நிகழ்ச்சிக்காக தேவேந்திரனும் அவரது மனைவியும் சென்றுள்ளனர்.

வயதான தாயார் மட்டும் வீட்டின் பின்பகுதியில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவை திறந்து அதன் உள்ளே இருந்த ரூ.6 லட்சம் பணம், வெள்ளி பொருட்களை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த தேவேந்திரன், பீரோ திறக்கப்பட்டு, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மானாமதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

திருடர்கள் வீட்டில் திருடிவிட்டு மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக சினிமா பாணியில் வீட்டிற்குள் இருந்த மிளகாய்பொடியை எடுத்து பரவலாக பல பகுதிகளில் தூவி விட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 13 Jun 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்