/* */

பூர்வீக சொத்தை ஏமாற்றிய கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

பூர்வீக சொத்தை ஏமாற்றிய கிராம நிர்வாக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பூர்வீக சொத்தை ஏமாற்றிய கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்
X
மதுராந்தகம் தாலுக்கா அலுவலகம் முன்பு நிலத்தை அபகரித்த கிராம உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி நடந்த உண்ணாவிரதப் போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் இவருடைய பூர்வீக சொத்து அதே கிராமத்தில் 69 சென்ட் நிலம் உள்ளது.

அந்த இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் தவறுதலாக சென்னையை சேர்ந்த பிரதீப்ராஜ் என்பவருக்கு 2012 ,ல் கிரையம் செய்து கொடுத்துள்ளார்.

அந்த இடத்தை பூர்வீக சொத்து உரிமையாளர் சம்பத் என்பவர் விற்பனை செய்ய முயன்ற போது அந்த இடம் ஏற்கனவே விற்பனை செய்து இருப்பதாக பதிவு துறையில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதே கிராமத்தை சேர்ந்த மோகன் பட்டா மாற்றம் தவறுதலாக வந்துவிட்டதால் விற்பனை செய்து விட்டேன் ஆகவே அதர்க்கு உண்டான பணத்தை திருப்பி தருவதாக கூறினார்.

ஆனால் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று நாளை என அலைகழித்து வருவதாக கூறுகின்றனர். மேலும் வருவாய் துறையில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வருவதால் பணம் கொடுக்க முடியாது உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக மதுராந்தகம் வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று, மதுராந்தகம் வட்டாச்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

Updated On: 15 Sep 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை