/* */

செங்கல்பட்டு மாவட்டத்தை குளிர்வித்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் வெயிலின் வெப்பம் தணிந்து குளிர்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தை குளிர்வித்த  மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை.

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் தொடர்ந்து வட தமிழக மான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதியான சோழிங்கநல்லூர், வேளச்சேரி, செங்கல்பட்டு, குரோம்பேட்டை, பல்லாவரம், பள்ளிக்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், திருநீர்மலை, படப்பை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

குளிர் காற்று வீசி வந்த நிலையில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் திடீரென சூரைக்காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. கோடைகாலத்தில் பெய்துவரும் இந்த மழையால் காய்ந்து உள்ள நீர்நிலைகள் சற்றே நீர் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 21 May 2021 11:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...