Begin typing your search above and press return to search.
தீயணைப்பு தொண்டு வாரவிழா
செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வாரவிழா அனுசரிக்கப்பட்டது
HIGHLIGHTS
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீ தொண்டு வாரவிழா ஏப்.14-முதல் 20-ஆம்தேதி வரை கொண்டாடப் படுகிறது. இதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜாஸ்மீன் மற்றும் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இதில் தீத்தொண்டு நாளை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை துவங்கப்பட்ட பின்பு இதுநாள் வரை பல்வேறு மீட்புப் பணிகளின் போது எதிர்பாராதவிதமாக தனது இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தீயணைப்பு துறையில் வீரமரணம் அடைந்த 33 தீயணைப்பு வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து மெளன அஞ்சலி செலுத்தினர்.இதில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.