Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீ விபத்து
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை அதிகரித்தால், உள்நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்
HIGHLIGHTS
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் இன்று மாலை எம்ஆர்ஐ ஸ்கேன் ஆய்வகத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவமனை அவசர சிகிச்சை நோயாளிகள் பிரிவு உட்புறம் முழுவதும் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்தது.
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது ஆனால் தீ கட்டுக்கடங்காமல் புகைமூட்டம் மளமளவென மருத்துவமனை வளாகம் முழுவதும் பரவியது.
இதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு நோயாளிகளை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் தீயை அணைக்க முடியாத காரணத்தினால் லாரிகளில் மணலை கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.