செங்கல்பட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்
செங்கல்பட்டில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் இன்று காலை செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள பயிற்சி அரங்கில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. வாகன ஓட்டிகளுக்காக நடந்த முகாமிற்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயா, ஆனந்தன், கார்த்திக், ஆகியோர் முன்னிலை வகித்தார். சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவ குழுவினர் பங்கேற்ற இம்முகாமில் வாகன ஓட்டிகளுக்கு கண் குறைபாடு தொடர்பாக பரிசோதனை, பொது மருத்துவ சோதனைகளை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.