/* */

அரியலூர்: வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணியை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணியை கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர்: வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணியை  கலெக்டர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தமுறை பணியை கலெக்டர் ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின் படி, 01.01.2022 ஆம் நாளை தகுதிநாளாக கொண்டு அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் 2022ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் 01.11.2021 முதல் 30.11.2021 வரை நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளுக்கென சிறப்பு முகாமானது 13.11.2021 (சனிக்கிழமை) 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 20.11.2021 (சனிக்கிழமை) 21.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நான்கு தினங்களில் அந்தந்த வாக்குசாவடி மையங்களில் நடைபெற்று முடிவடைந்ததில், சேர்க்கைக்கென 6660 விண்ணப்பங்களும், திருத்தம் செய்திட 1063 விண்ணப்பங்களும், முகவரி மாற்றத்திற்கென 482 விண்ணப்பங்கள், நீக்கம் செய்திட 934 விண்ணப்பங்களும் என மொத்தம் 9139 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், 27.11.2021 (சனிக்கிழமை) மற்றும் 28.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களில் சிறப்பு முகாமானது அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஒரத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, படிவங்கள் பெறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக, திருமானூர் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் கடந்த 20.11.2021 மற்றும் 21.11.2021 ஆகிய தினங்களில் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து நேரடியாக களஆய்வு மேற்கொண்டு, விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

இந்தஆய்வின்போது, அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலை, வட்டாட்சியர் ராஜமூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 28 Nov 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...