/* */

மதனத்தூர் கருப்புசாமி கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மதனத்தூர் கருப்புசாமி கோவில்ண்டியலில் இருந்த 10ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துகொண்டு உண்டியலை தூக்கி எறிந்து உள்ளனர்.

HIGHLIGHTS

மதனத்தூர் கருப்புசாமி கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
X

உண்டியல் திருடு போன மதனத்தூர் கோவில்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தில், கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இதில் உள்ள உண்டியலை அடையாளம் தெரியாத மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவிலில் இருந்த மின் விளக்குகளை அணைத்து விட்டு, கோவில் கேட்டில் இரும்பு கம்பியில் இரும்பு செயின் மூலம் கட்டி வைக்கப்பட்டு இருந்த உண்டியலை எடுத்து சென்று மர்ம நபர்கள், கொள்ளிடக்கரை அருகே உள்ள மதகில் உண்டியலில் இருந்த சுமார் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு உண்டியலை தூக்கி எறிந்து உள்ளனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கண்டு எடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காரைக்குறிச்சி கிராமத்தில் இரண்டு வீடுகளில் திருட்டு நடைபெற்ற நிலையில், கோவில் உண்டியல் திருட்டு நடைபெற்று உள்ளது.தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 5 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  6. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  7. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  9. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  10. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!