/* */

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி சினை பசுமாடு உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற சினை பசுமாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி சினை  பசுமாடு உயிரிழப்பு
X

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கியதில் சினை பசுமாடு இறந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரியமனல் கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் ஜெயங்கொண்டம் அருகே 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த சினை பசுமாடு ஒன்று இன்று காலை திருச்சி-சிதம்பரம் சாலையில் மேய்ச்சலுக்கு சென்றது.

அப்போது சாலையோரத்தில் இருந்த தெரு விளக்கு மின் கம்பம் அருகிலிருந்த செடி, கொடிகளை பசுமாடு தின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தின் கீழ்ப் புறத்தில் இருந்த எர்த் மின் வயரில் பசு மாட்டின் உடல் பட்டது.

இதில் மின்சாரம் தாக்கி பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் இதுகுறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக தெரு விளக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இறந்த பசு மாட்டின் மதிப்பு சுமார் 25 ஆயிரம் இருக்கும் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 1 Dec 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை