/* */

ஜெயங்கொண்டம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தொழிலாளருக்கு ரூ.25லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

தா.பழூரில் மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தொழிலாளருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, தா.பழூரில் மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தொழிலாளருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் மணல் மாட்டு வண்டி ஓட்டி, அன்றாடம் வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மாட்டு வண்டி மணல் குவாரிகள் மூடப்பட்டதால், தொழில் இல்லாமல் பாஸ்கர் மிகவும் வறுமையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அனுமதி இல்லாமல் மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்ததாக கூறி, காவல்துறையினர் வண்டியை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நீதிமன்ற உத்தரவுப்படி 5,000 அபராதம் கட்டினால், மாட்டு வண்டியை மீட்டு செல்லலாம் என போலீஸார் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே சரியான வேலையில்லாமல், வருமானம் இன்றி ஏழ்மை நிலையில் இருக்கும் போது, காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை மீட்க முடியாதது குறித்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டு, சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான பாஸ்கர், உதயநத்தம் பேருந்து நிறுத்தத்தில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தண்ணீரை அவர் மீது ஊற்றி தீயை அணைத்தனர். ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாஸ்கர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த மாட்டுவண்டி தொழிலாளர் பாஸ்கர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும், குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும், தா.பழூரில் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On: 4 Sep 2021 7:57 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  2. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  6. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  7. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை